|
பக்கத்து வீட்டு சங்ரம்மாவின் ஐந்து வயது மகள் ப்ரியாவிடம்
வந்து,
"
தம்பிப் பாப்பாவுக்கு காய்ச்சல். அம்மா உங்ககிட்ட
100
ரூபா வாங்கிட்டு வரச் சொன்னாங்க
"
என்று,
அந்த பிஞ்சு மழலை மொழியில் சொல்ல,
ப்ரியாவிற்கு கோபம் தலைக்கேறியது.
"ஏண்டி…
ஒங்கம்மாவுக்கு என்னக்கி காசு கேக்கறதுன்னு
வெவஸ்தையேயில்ல. வெள்ளிக் கிழமயும் அதுவுமா,
காலங்காத்தால. போடி,
போய்,
‘இல்லே’ன்னு
சொல்லு"
என்று சொல்லும்போதே,
"ஏய்
ப்ரியா"
என்று கூப்பிட்டபடி வந்தான்,
ப்ரியாவின் கணவன் அழகர்.
"போன
மாசம் உங்கப்பாவுக்கு இருதய ஆபரேஷன் பண்ணினோமே…
அன்னிக்கு என்ன கிழமை
?"
என்று ப்ரியாவைக் கேட்க,
ப்ரியா,
"வெள்ளிக்
கிழமை"
என்றாள்.
"ஆபரேஷனுக்கு
டாக்டர் கட்டச் சொன்ன ஒரு லட்சத்த,
நம்ம ரமேஷ்,
அவன் ஒய்ஃபோட நகைய அடமானம் வெச்சுக் குடுத்தான்.
‘வெள்ளிக்
கிழமையாச்சே’ன்னு,
ரமேஷோட பொண்டாட்டி நினைச்சிருந்தா,
ஒங்கப்பா உயிரோட இருந்திருப்பாரா
?
இறந்திருப்பாரு. வெள்ளிக் கிழமையும்,
செவ்வாக் கிழமையும் உடம்புல உயிர் இருக்குற மட்டுந்தான்.
பர்ஸ்ல பணம் இருக்கு.
100
ரூபாயக் குடுத்தனுப்பு"
என்றபடி,
சாமி அறைக்குள் சென்றான் அழகர்.

|