"நன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்"

நுழைவாயில்

கதை
  நியாயங்கள்
  சூப்பர் ஹிட் வெள்ளி
  வாக்குமூலங்கள்
  சுண்ணாம்பு
  பூவும் வேரும்
கவிதை
  பாசக்கடல்
  விதி
  சுடர்க தமிழ்நெஞ்சம்
  மூன்றாம் காதல்
கட்டுரை
  பாபருக்கும், இராமருக்கும்...
 அனிச்ச மலர்
நேர்க்காணல்
  க்ருஷாங்கினி
நட்சத்திர ஆல்பம்
திரையோவியம்
காலண்டர் 2006
Difficulty reading Tamil Text?
எங்களுடன் தொடர்புகளுக்கு...
தமிழில் சுலபமாக எழுத! 
யுனிகோட் தமிழில் தட்டச்சு செய்ய
 

 

சுடர்க தமிழ்நெஞ்சம்

கம்பன் கழகம், பிரான்சு

காரைக் காலின் அருகினிலே
கமழும் ‘நிரவி’ நல்லூரில்,
TamilNenjam Amine
ஊரைக் காக்கும் நல்லோர்தம்
உண்மை நெறியைக் காத்ததுவாம்!
ஏரைப் போன்றே உழுதுலகில்
இன்பப் பயிரை விளைத்ததுவா
ம்!
தேரை நிகர்த்த பொலிவோடு
திகழும் இனிய தமிழ்நெஞ்சம்!

பேரீச் சம்போல் சுவைகூட்டி,
பெரியோர் சொன்ன நெறிகாட்டி,
மாரி பொழியும் குளிராக
மனமே சிலிர்க்கக் கவிதீட்டி,
பாரி வள்ளல் கொடைபோல
வாரித் தமிழைப் படைத்திடுமே!
பாரீச் நகரில் பைந்தமிழைப்
பரப்பி மகிழும் தமிழ்நெஞ்சம்!

புல்லும் பூண்டும் முளைக்காதே!
புவியில் இனிமை தழைக்காதே!
வெல்லும் வெறியால் மண்ணுலகை
விரைந்து பொசுக்கும் பெரும்போரால்!
செல்லும் வழியில் முள்விதையைச்
செரிதல் ஏனோ கொடியோரே!
சொல்லும் வல்ல கருத்தாலே
சுடர்க உயர்ந்து தமிழ்நெஞ்சம்!

Copyright © 2006 TamilNenjam.com All right reserved
Best viewed IE 4 and above. Netscape 7.x, FireFox 0.8 and above.with resolutions 800x600 and above