"நன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்"

 கதை
  பிம்பம்
  மறதி
  சிலந்திவலை
  விடுதலை
கவிதை
  மனிதனை நினைத்தால்...
  புகலிடம் தாராயோ
  தமிழ்நெஞ்சம்
  அப்பாவின் கையெழுத்து
  முத்தான முத்துக்கள்
  கட்டுரை
  கற்பு
  கவிதாயினி மதுமிதா
  தொலைநோக்கு விகடன்
  சிரிக்க சிந்திக்க
  சிந்தித்தால் சிரிப்புவரும்
  சிரிப்பதற்காக அல்ல
  நூல்கள் அறிமுகம்
  நட்சத்திர ஆல்பம் 
  திரையோவியம்
  காலண்டர் 2006
.. Difficulty reading Tamil Text ?
.. Tamil Fonts
.. எங்களுடன் தொடர்புக்ளுக்கு...
.. தமிழில் சுலபமாக எழுத!
.. யுனிகோட் தமிழில் தட்டச்சு ...

சந்தனப்பேழை

01 - 2006

02 - 2006

03 - 2006

04 -2006

 

 

 
மனிதனை நினைத்தால்

பன்னீர்செல்வம்

 மனிதனை நினைத்தால்
 எல்லா உயிர்களும்
 மலைத்து நிற்கும்!
 
 பிறர் குறைகளைச்
 சுட்டிக் காட்டுவதில்
 வேறு எந்த உயிர்களும்
 அவனை வென்றதாக வரலாறு கிடையாது
 என்பதால்!
 
 அவன்
 தன் பிழைகளை
 என்றுமே
 ஏற்றுக் கொண்டதில்லை!
 
 இவன் கோபங்கொள்வான்
 ஆனால்
 ஏண்டா பாம்பு போல
 சீறுகிறாய் என்று மற்றவரைப் பார்த்துச்
 சொல்வான்!
 
 அடிக்கடி
 குணம் மாறுவான்
 ஆனால் ஏன்தான் இந்தக்
 குரங்கு சேட்டையோ என்பான்!
 
 இவன் ஏமாற்றிப் பிழைப்பான்
 தந்திரங்கள் செய்வான்!
 ஆனால் அட குள்ளநரியே
 என்று பிறரை அழைப்பான்!
 
 தன் தவறுகளை
 என்றுமே
 ஒப்புக்கொள்ள மறுக்கும்
 மனிதன்
 இறைவனின் படைப்பில்
 தனித்துவம் மிக்கவனாமே?
 இந்த மனிதனா
 இறைவனின் சாயலில்
 படைக்கப்பட்டவன்?
 மனிதனை
 எந்த உயிர்களாலும்
 புரிந்துகொள்ளவே
 முடிவதில்லை!

Copyright © 2006 TamilNenjam.com All right reserved
Best viewed IE 4 and above. Netscape 7.x, FireFox 0.8 and above.with resolutions 800x600 and above