"நன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்"

 கதை
  பிம்பம்
  மறதி
  சிலந்திவலை
  விடுதலை
கவிதை
  மனிதனை நினைத்தால்...
  புகலிடம் தாராயோ
  தமிழ்நெஞ்சம்
  அப்பாவின் கையெழுத்து
  முத்தான முத்துக்கள்
  கட்டுரை
  கற்பு
  கவிதாயினி மதுமிதா
  தொலைநோக்கு விகடன்
  சிரிக்க சிந்திக்க
  சிந்தித்தால் சிரிப்புவரும்
  சிரிப்பதற்காக அல்ல
  நூல்கள் அறிமுகம்
  நட்சத்திர ஆல்பம் 
  திரையோவியம்
  காலண்டர் 2006
.. Difficulty reading Tamil Text ?
.. Tamil Fonts
.. எங்களுடன் தொடர்புக்ளுக்கு...
.. தமிழில் சுலபமாக எழுத!
.. யுனிகோட் தமிழில் தட்டச்சு ...

சந்தனப்பேழை

01 - 2006

02 - 2006

03 - 2006

04 -2006

 

 

 

புகலிடம் தாராயோ?

- அமின்

சித்திரைத் திங்கள் வெயிலென - என்
    
சிந்தையை நோகச் செய்தவளே
நித்திரை உலகுக்கு அனுப்பாதே - என்

     நிம்மதி கெடுத்து வாட்டாதே!
பத்தரை மாற்றுத் தங்கமெனப் - பல

     பண்புகள் கொண்டு ஒளிர்ந்தவளே!
இத்தரை மீது நான்வாட - நீ

     என்னை விட்டுச் ஏன்சென்றாய்?

உலவும் தென்றல் குளிரெனவே - என்
     உள்ளச் சோலையில் பூத்தவளே!
இலவு காத்த கிளிபோலே எனை

     ஏங்க வைத்தே ஏன்சென்றாய்?
பிரிவாம் என்ற புயல்வீசி - நற்
     பாசச் சுடரை அனைத்தாயே!
சருகாய் என்றன் வாழ்வுதனைத் - தரையில்

    
சரியச் செய்தே ஏன்சென்றாய்?

இதயம் வாழும்; இனியவளே - எனை
     இணைத்து வாழ்ந்திட நினைத்தவளே!
உதய மலராய்ச் சிரித்தவளே - என்

     உயிரே! ஒளியே! ஏன்சென்றாய்?
சாதியின் கொடுமை தாளாமல் - துயர்த்
     தணலில் நெஞ்சம் கொதித்திடவே
பாதியில் பிரிந்து வாடுகிறேன் - இந்தப்

    
பாவிக்குப் புகலிடம் தாராயோ?

Copyright © 2006 TamilNenjam.com All right reserved
Best viewed IE 4 and above. Netscape 7.x, FireFox 0.8 and above.with resolutions 800x600 and above