"நன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்"

தமிழ்நெஞ்சம் - நுழைவாயில்

 கதை
  காத்திருத்தல்
  பரீட்சை நேரம்
  கடவுளின் பெயரால்
  நாக் அவுட் நாவன்னா
கவிதை
  மறவாதீர்
  வண்டமிழை வாழ்த்திடுவோம்
  நெஞ்சத்தில் வைத்துப் போற்று
  மஞ்சத்தின் பரிசு
  தரணி வாழ்த்திட வா
  மைக்காரி
  கட்டுரை
  ஆணவம் தந்த தண்டனை
  மூவகை மக்கள்
  கவிதாயினி இளம்பிறை
  ஜெயந்தி பேசுகிறேன்
  சிரிக்க சிந்திக்க
  சிந்திப்போம்
  அனுபவம் புதுமை
  நூல்கள் அறிமுகம்
  நட்சத்திர ஆல்பம் 
  திரையோவியம்
  காலண்டர் 2006
.. Difficulty reading Tamil Text ?
.. Tamil Fonts
.. எங்களுடன் தொடர்புகளுக்கு...
.. தமிழில் சுலபமாக எழுத!
.. யுனிகோட் தமிழில் தட்டச்சு ...
 

 

 

தரணி வாழ்த்திட வா!


அப்பாவு அல்போன்ஸ்

சமயம் படைக்கா பரமனையே
சாலப்பகன்றது தமிழ் நூலாம்
சமர்த்
தாய் ஆரியன் கற்றானே
சமயம் அறிந்து தீயிட்டானே -பின்
 

வந்தாரும் தமிழ் அழித்தாரே
இரும்போர் சிலரும் பழித்தாரே
விரும்பாதாரும் வெறுத்தாரே
மறப்ப தெங்கனம் எம்மொழியாரே
 

நெடுங்கடல் ஓடியும் தழிழ் கூறு
செம்மொழி நம்மொழி எனக்கூறு
செவிகள் குளிர்ந்திட அதைக்கூறு
சிந்தை மகிழ்ந்திடும் விதம்கூறு
 

முது மொழி நம் மொழி மூல மொழி
பிறந்தன இதன்வழி பல மொழி
இதற்கிணை ஏது ஒரு மொழி
செகத்திற் அறிந்த தமிழ் மொழி
 

இயல் இசை நாடகம் தந்தனையே
இலக்கிய இலக்கியம் கொண்டனையே
காவிய காப்பியம் கண்டனையே
காதல் வரச் செய்தனையே
 

தமிழே தரணி வாழ்த்திட வா
தமிழ் இணம் ஓங்கி வளர்ந்திட வா
தலைமுறை தலைமுறை

தழைத்திடவா.

 

Copyright © 2006 TamilNenjam.com All right reserved
Best viewed IE 4 and above. Netscape 7.x, FireFox 0.8 and above.with resolutions 800x600 and above