"நன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்"

தமிழ்நெஞ்சம் - நுழைவாயில்

 கதை
  காத்திருத்தல்
  பரீட்சை நேரம்
  கடவுளின் பெயரால்
  நாக் அவுட் நாவன்னா
கவிதை
  மறவாதீர்
  வண்டமிழை வாழ்த்திடுவோம்
  நெஞ்சத்தில் வைத்துப் போற்று
  மஞ்சத்தின் பரிசு
  தரணி வாழ்த்திட வா
  மைக்காரி
  கட்டுரை
  ஆணவம் தந்த தண்டனை
  மூவகை மக்கள்
  கவிதாயினி இளம்பிறை
  ஜெயந்தி பேசுகிறேன்
  சிரிக்க சிந்திக்க
  சிந்திப்போம்
  அனுபவம் புதுமை
  நூல்கள் அறிமுகம்
  நட்சத்திர ஆல்பம் 
  திரையோவியம்
  காலண்டர் 2006
.. Difficulty reading Tamil Text ?
.. Tamil Fonts
.. எங்களுடன் தொடர்புகளுக்கு...
.. தமிழில் சுலபமாக எழுத!
.. யுனிகோட் தமிழில் தட்டச்சு ...
 

 

 

மறவாதீர்


- செவ்வேள்

இளங்கதிர் எழவும் இறைகொளக் கருதி
இணைந்தெழும் புள்ளினம் போல
வளமுடன் வாழ மிகுபொருள் நாடி
வையகம் சுற்றிடும் நண்பீர்!
உளங்கொள வேண்டி உமக்கிது புகன்றேன்!
உணருமின் அன்புடன்! நீர்தாம்
விளங்குறும் ஊர்கள் எங்கணுய்ந் தாலும்
வியன்றமிழ் மறக்கலிர் என்றும்!

மலர்தொறும் நாடி மலிவுற வுண்டு
மகிழ்வுறும் வண்டினம் போலக்
கலைமொழிப் பண்பின் பலதிறங் கண்டு
களிபெற வலம்வரு பெரியீர்!
நலங்கொள வேண்டி நவின்றனன்! நீர்தாம்
நாடிய நாடெது வெனினும்
தலைமுறை யாகப் புகழுற வாழ்ந்த
தமிழ்க்கலை மறக்கலிர் என்றும்!

புற்றரை மேவிப் பொழுதுடன் இல்லம்
புகுந்திடும் ஆவினம் போலக்
கற்றிட வெண்ணிக் கடல்கடந் தேகிக்
கலைபல பயின்றபின் உவகை
உற்றிட மீளும் உறுதவ மாண்பீர்!
உமக்கிது சொற்றனன்! உள்ளம்
பற்றுமின்! உலகிற் பழையநம் தமிழ்ப்பண்
பாடதை மறக்கலிர் என்றும்!

ஈன்றவள் சிறக்க இடர்ப்பட எங்கோ
ஏகிடும் மக்களைப் போல
ஆன்றநன் பனூல்கள் ஆயுந ராக
அரசியல் தூதுவ ராகத்
தோன்றிய ஊர்கள் யாவையு நாடுந்
தூயவ ரேமனங் கொள்வீர்!
தோன்றிய நாட்குச் சான்றில தாய
தமிழகம் மறக்கலிர் என்றும்!

 

 

Copyright © 2006 TamilNenjam.com All right reserved
Best viewed IE 4 and above. Netscape 7.x, FireFox 0.8 and above.with resolutions 800x600 and above